18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கம் நகரில் கொரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்ட காய்கறி கடைகளுக்கு காவல்துறையினர் அபராதம் .

செங்கம் நகரில் கொரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்ட காய்கறி கடைகளுக்கு காவல்துறையினர் அபராதம் .

எழுதியவர்: mohan May 15, 2021, 6:36 am

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரில் கொரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்ட காய்கறி கடைகள் மற்றும் முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்தனர்செங்கம் பகுதியில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து, காவல்துறையினர் சார்பில் செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் சரவணகுமரன் உத்தரவின்பேரில் காவல்துறை ஆய்வாளர் சரவணன் மற்றும் காவல்துறையினர் தீவிரமாக கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி, பொது இடங்களில் முக கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்து வருகின்றனர். பணி , வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். செங்கம் பகுதியில் வாகனத்தில் சுற்றித்திரியும் இளைஞர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!