17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராஜபாளையத்தில் சொத்து தகராறில் தாய் மாமாவை கொன்ற மருமகன் குடி போதையில் நடந்த விபரீதம் .

இராஜபாளையத்தில் சொத்து தகராறில் தாய் மாமாவை கொன்ற மருமகன் குடி போதையில் நடந்த விபரீதம் .

எழுதியவர்: mohan May 14, 2021, 6:27 am

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஆவரம்பட்டி பகுதியை சேர்ந்தவர்செந்தட்டிகாளை மகன் கணேஷன் (வயது 37 ) இவரது அக்கா மகன் கார்த்திக் (வயது 25)த/பெ தர்மன் இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே சொத்து தகராறு உள்ளது இந்த நிலையில் நேற்று இரவு இருவரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்தியுள்ளனர் அப்போது ஏற்பட்ட தகராறில் கார்த்தி தாய் மாமனான கணேசனை பிடித்து தள்ளியதில் தலையின் பின்புறம் அடிபட்டு மயங்கி விழுந்துள்ளார் இவரை அருகே இருந்தவர்கள் தூக்கி மருத்துவமனை கொண்டு சென்றபோது ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் இதையடுத்து ராஜபாளையம் வடக்கு காலனி போலீசார் கார்த்திக் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்…

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!