17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » முழு ஊரடங்கையடுத்து மதுரையில் முக்கிய சாலைகளே வெறிச்சோடி காணப்பட்டன:

முழு ஊரடங்கையடுத்து மதுரையில் முக்கிய சாலைகளே வெறிச்சோடி காணப்பட்டன:

எழுதியவர்: mohan May 11, 2021, 7:01 am

கொரோனா வைரஸ் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு விதமான நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் தமிழகத்தில் இன்று முதல் 14நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முழு ஊரடங்கை பால்,மருத்தகம்,காய்கறி கடை,பழக்கடை,மளிகை கடை,உணவகம் போன்ற அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.மதுரையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கோரிப்பாளையம் மாட்டுத்தாவணி பேருந்து அதே போல் பெரியார், ஆரப்பாளையம்… ஏற்றம் திருநகர் திருப்பரங்குன்றம் வில்லாபுரம் ஆவணியாபுரம் ஆகிய இடங்கள் வெறிச்சோடி உள்ளிட்ட முக்கிய சாலைகள் அனைத்து போக்குவரத்தானது குறைந்த அளவிலேயே காணப்பட்டு வருகிறது. இதனால், பிரதான சாலைகளே வெறிச்சோடிக் காணப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு காவல்துறையினர் ஊரடங்கு பத்தி அறிவுரை கூறி வருகிறார்கள்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!