17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கம் அருகே கார் விபத்து ஒருவர் படுகாயம்

செங்கம் அருகே கார் விபத்து ஒருவர் படுகாயம்

எழுதியவர்: mohan May 9, 2021, 2:28 pm

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பாய்ச்சல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வின்னவனூர் பகுதியில் அருகே சென்னை நோக்கி அதிவேகமாக சென்ற கார் திடிரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்தானது. இதையறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பாய்ச்சல் காவல் நிலைய ஆய்வாளர் விபத்தில் சிக்கியவரை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தார்.மேற்கொண்டு விசாரணையில் கார் உரிமையாளர் திருவள்ளூர் மாவட்டத்தை சார்ந்த சேகரன் என்பதும் செங்கத்தில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு சென்று தனது வீட்டிற்கு திரும்பும் போது கார் கட்டுப்பாட்டை இழந்தது சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தானது.மேலும் விபத்தின் சரியான நேரத்தில் காரில் இருந்த அவசரகால காற்று பலூன் திறந்தால் உயிர்சேதம் தவிர்க்கபட்டது

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!