17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் பணியின்போது உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு நினைவை போற்றும் வகையில் நினைவு அஞ்சலி .

தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் பணியின்போது உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு நினைவை போற்றும் வகையில் நினைவு அஞ்சலி .

எழுதியவர்: mohan April 15, 2021, 11:50 am

மும்பை விக்டோரியர் துறைமுகத்தில் 1944 ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து ஏற்பட்டது இதை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடினார்கள் இந்த பணியின்போது 66 தீயணைப்பு வீரர்கள் பலியானார்கள் அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 14 தேதி உயிர் தியாகம் செய்த தீயணைப்பு வீரர்களின் நினைவை போற்றும் வகையில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது அந்த வகையில் .. தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு தென் மண்டலத்தில் உள்ள 9 மாவட்டங்களை சார்ந்த அனைத்து தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையங்களில் தீ தொண்டு நாள் உயிர் நீத்த வீரர்களுக்கு நினைவை போற்றும் வகையில் மதுரை டவுன் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு நிலையத்தில் உள்ள வளாகத்தில் மலர்வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது இதில் தென்மண்டல தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு துணை இயக்குனர் விஜயகுமார் மதுரை மாவட்ட தீயணைப்பு அலுவலர் வினோத் ஆகியோர் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர் மற்றும் அனைத்து நிலை அலுவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் வீரவணக்கம் செலுத்தினார்கள் செய்தியாளர் வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!