திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கரியமங்கலம் பகுதியில் இயங்கி வரும் வெற்றித் தமிழன் காவலர் பயிற்சிப் பள்ளியில் தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது இதில் திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் கள்ளக்குறிச்சி திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தேர்ச்சி பெற்ற சுமார் 150க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்கள் பயன் தரும் வகையில் வெற்றித் தமிழன் காவலர் பயிற்சி மையம் சார்பில் அனைவருக்கும் இலவச உடற்பயிற்சி முகாம் நடத்தப்பட்டது இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் காவலர் உடற்தகுதி தேர்வின் போது நடத்தப்படும் ஓட்டப்பந்தயம் கயிறு ஏறுதல் நீளம் தாண்டுதல் பெண்களுக்கான உயரம் தாண்டுதல் பந்து வீசுதல் உள்ளிட்ட பயிற்சிகள் கொடுக்கப்பட்டன மேலும் தமிழ்நாடு காவல்துறையில் சேர விரும்பும் அனைவருக்கும் சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது
செங்கம் அருகே இரண்டாம் நிலை காவலர் தேர்வில் வெற்றி பெற்ற இளைஞர்களுக்கு வெற்றித் தமிழன் காவலர் பயிற்சி மையம் சார்பில் இலவச உடற்பயிற்சி முகாம் நடைபெற்றது.
எழுதியவர்: mohan April 12, 2021, 5:52 pm




You must be logged in to post a comment.