18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆயிரம் அபராதம் விதித்தாலும் மக்களாய் பார்த்து திருந்தாவிட்டால் கொரானா வைரஸ் விரட்ட முடியாது-மாநகராட்சி அதிகாரிகள்

ஆயிரம் அபராதம் விதித்தாலும் மக்களாய் பார்த்து திருந்தாவிட்டால் கொரானா வைரஸ் விரட்ட முடியாது-மாநகராட்சி அதிகாரிகள்

எழுதியவர்: mohan April 11, 2021, 11:26 am

கொரானா  வைரஸ் ஆனது இரண்டாம் அலை நாடு முழுவதும் மீண்டும் பரவத்தொடங்கியது இதனை அடுத்து தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது பொது வெளியே வரும் பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது இதையும் மீறி நூற்றுக்கு 70% பொதுமக்கள் முக கவசம் அணியாமலேயே வெளியே வருகிறார்கள் இதனால் நோய் தொற்று வேகம் அதிகரித்து வருகிறது இதை கட்டுப்படுத்தும் வகையில் மாநகராட்சி அதிகாரிகள் முக கவசம் அணியாத நபர்களுக்கு ரூபாய் 200 வீதம் மொத்தம் ரூபாய் 7200 அபராதம் அபராதம் விதித்து உள்ளார்கள் இன்று மதுரையில் மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் பலர் முக கவசம் அணியாமல் சாலையில் சென்றது அதிர்ச்சிக்குள்ளாக்கியது.. மாநகராட்சி சுகாதார அதிகாரி ஒருவர் கூறுகையில் மக்களாய் பார்த்து திருந்தாவிட்டால் கொரோனாவை ஒழிக்க முடியாது என வேதனையுடன் தெரிவிக்கின்றனர் ஆயிரம் அபராதம் விதித்தாலும் தங்கள் உடல் நலன் அக்கறை கொண்டு குடும்ப நலனையும் கருத்தில் கொண்டு வெளியே வரும்பொழுது முக கவசம் அணிந்து வரவேண்டும் மற்றும் சமூக இடைவேளையை பின்பற்றி இருக்க வேண்டும் மற்றும் அடிக்கடி கை கால்களை சுத்தமாக சோப்பு போட்டு மற்றும் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் என மாநகராட்சி அதிகாரி வேதனையுடன் தெரிவித்தார்…… மக்களாய் பார்த்து திருந்த வேண்டும் இல்லை என்றால் கட்டாய ஊரடங்கு வந்தே தீரும் இதுவே நிதர்சனம்!

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!