திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சட்டமன்ற தனி தொகுதியில் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கமாக முதியோர் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு தபால் வாக்கு பதிவு செய்வதற்காக அவர்களது இல்லத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்போடு தபால் வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது இதில் குப்பநத்தம் பகுதியில் பொது மக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த தேமுதிக தொண்டர்கள் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் தலைமையிலான தொண்டர்கள் நேரடியாக தபால் வாக்கு பதிவிடும் இடத்தில் திமுகவினர் வாக்கு சேகரிப்பில் இருந்ததைக் கண்ட தேமுதிக அதிமுக வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் அப்போது தேர்தல் நடத்தும் அதிகாரிகள் என்ன செய்வது என புரியாமல் அங்கிருந்து அவசர அவசரமாக கிளம்பிவிட்டார்கள் அப்போது அவர்களை வாகனத்தில் ஏற விடாமல் வாகனத்தை முற்றுகையிட்ட தேமுதிக மற்றும் தொண்டர்கள் ஜனநாயக முறைப்படி நேர்மையாக தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
செங்கம் தொகுதியில் தபால் வாக்கு பதிவு செய்யும் அதிகாரிகளின் வாகனத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு .
எழுதியவர்: mohan March 30, 2021, 4:55 pm




You must be logged in to post a comment.