திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஜவ்வாதுமலை பகுதி மக்களின் நலன் கருதி சீரிய முயற்சியினால் ஜமுனாமரத்தூர் தெற்கு ஒன்றியம் கிளையூர் கிராமத்தில் அம்மா மினி கிளினிக் துவக்க அரசு ஆணையிட்டது. அதன்படி ஜமுனாமரத்தூர்தெற்கு ஒன்றிய கழக செயலாளரும் குப்பநத்தம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குனருமான கிளையூர் எம். சி.அசோக் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார். மேல் பள்ளிப்பட்டு அரசு பொதுநல மருத்துவர் சிலம்பரசன் முதல் மருத்துவ சிகிச்சையை துவக்கி வைத்தார். உடன் சுகாதார ஆய்வாளர் ஆர். ராஜேஷ், சீனியர் சுகாதார செவிலியர் ஆர். பூங்காவனம் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
ஜவ்வாதுமலை பகுதியில் அம்மா மினி கிளினிக் தொடக்கம்.
எழுதியவர்: mohan February 27, 2021, 4:48 pm




You must be logged in to post a comment.