மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் மூலக்கரை பகுதியில் உள்ள தனியார் மகளிர் மாநில அளவிலான இரண்டு நாள் சிலம்பாட்ட போட்டிகள் நடைபெறுகிறது இதில் தமிழகம் முழுவதும் உள்ள 25 மாவட்டங்களில் இருந்து 1500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர் சிலம்பம் தடுப்புமுறை சுருள்வாள் இரட்டை சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன இதில் மாநில அளவிலான தேர்வு பெறும் மாணவர்களுக்கு விருது கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பாட்டம் போட்டியை சர்வதேசத்தில் தரம் உயர்த்தவும் ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டிகள் நடைபெறுகிறது என்றும் இதன் மூலம் மாணவர்களுக்கு தற்காப்பு கலை தன்னம்பிக்கை வளர முயற்சி செய்யப்பட்டுள்ளது என பயிற்சியாளர்கள் கூறுகின்றனர்.
மூலக்கரை தனியார் மகளிர் மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டிகள் நடைபெறுகிறது.
எழுதியவர்: mohan February 21, 2021, 2:34 pm




You must be logged in to post a comment.