வேலூர், பிப்.17 – வேலூர் அடுத்த அடுக்கம்பாறை பிள்ளையார்கோவில்தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி (50) முன்னாள் இராணுவ வீரர். இவரின் மகன் வினோத் (25) நேற்று குடிபோதையில் வீட்டுக்கு வந்த சுப்பிரமணி தன்னுடைய மகனிடம் தகராறு செய்து உள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த சுப்பிரமணி வீட்டில் இருந்ததுப்பாக்கியை எடுத்து வந்து வினோத்தை சுட்டார். சம்பவ இடத்தில் குண்டு பாய்ந்து இறந்தார் வினோத். தகவல் அறிந்து வந்த வேலூர் தாலுகா போலீசார் பிரேதத்தை கைப்பற்றி அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தந்தையான சுப்பிரமணியை போலீசார் கைது செய்தனர்.
வேலூரில் குடிபோதையில் மகன் சுட்டுக்கொலை .
எழுதியவர்: mohan February 17, 2021, 1:47 pm




You must be logged in to post a comment.