17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்.

இராமநாதபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்.

எழுதியவர்: mohan February 2, 2021, 9:54 am

முகமது நபியைஇழிவுபடுத்தி பேசிய கல்யாண ராமனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் உடனடியாக கைதுசெய்ய கோரிதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் சார்பில்கண்டன ஆர்ப்பாட்டம்நடந்தது.கோவை வடக்கு மாவட்டம் சார்பில் நடந்த பாஜக., பிரசார கூட்டத்தில் கல்யாண ராமன் முகமது நபிகளை அவதூறாக பேசி, அமைதி பூங்காவான தமிழகத்தில் சட்ட ஒழுங்கை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கில் பேசிய கல்யாண ராமனை உடனடியாக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்கு பதிவு சேய்ய சிறையில் அடைக்க கோரிமாவட்ட தலைவர் முகமது அயூப்கான் தலைமையில்இன்று ( 01/02/2021 ) மாலை 4 மணியளவில் இராமநாதபுரம் சந்தை திடலில்கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில பேச்சாளர் சுஜா அலி கண்டன உரையாற்றினார்,மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் ஆரிப்கான், மாவட்ட பொருளாளர் ரஹ்மான்அலி, மாவட்ட துணை தலைவர் முகமது பஷீர், மாவட்ட துணை செயலாளர்கள் ஹக், மன்சூர், சுல்தான், தஸ்தஹீர் மற்றும் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்து இருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!