18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் முட்டை ஏற்றி வந்த லாரி மண்ணில் சிக்கி விபத்து………

கீழக்கரையில் முட்டை ஏற்றி வந்த லாரி மண்ணில் சிக்கி விபத்து………

எழுதியவர்: ஆசிரியர் January 17, 2021, 3:08 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முட்டை வியாபாரிகளுக்கு நாமக்கல்லை சேர்ந்த ஏ.சி பாலா என்பவருக்கு சொந்தமான முட்டை லாரி நாமக்கல்லில் இருந்து கோழிமுட்டைகள் ஏற்றி வந்த லாரி கீழக்கரை பெரியகாடு மம்காசி அப்பா பள்ளிவாசல் அருகில் டிராக்டர் நின்ற காரணத்தினால் லாரி டிரைவர் வாகனத்தை ஒதுக்கிய பொழுது மழையின் காரணமாக மண் ஈரத்தன்மையுடன் இருந்த நிலையில் லாரி காம்பவுண்ட்டை உடைத்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில் லாரி ஓட்டுநர் ஆனந்த் என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. காலை நேரம் என்பதால் பொதுமக்கள் யாருக்கும் அவ்விடத்தில் இல்லாத காரணத்தினால் பாதிப்பும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. முட்டைகள் முழுவதும் உடைந்து சேதாரமானது.

இதுதொடர்பாக கீழக்கரை சார்பு ஆய்வாளர் செல்வராஜ் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்றைய செய்தி நிரந்தர வரலாறு கீழை நியூஸ் SKV முகம்மது சுஐபு

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!