சூரிய மண்டலத்தில் சுமார் 400 ஆண்டுகளுக்கு பின்னர் வியாழன், சனி ஆகிய இரண்டு கோள்களும் ஒன்றோடு ஒன்று நெருங்கி இணைந்து ஒரே கோள் போன்று காட்சியளிக்கும் அபூர்வ நிகழ்வை வரும் டிசம்பர் மாதம் 20-ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் வெறும் கண்களால் காணமுடியும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சூரிய குடும்ப வரிசையில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் வியாழன் மற்ற கோள்களை விட இரண்டு மடங்கு பெரியது. ஆறாவது இடத்தில் இருக்கும் இரண்டாவது மிகப் பெரிய கோளான சனி, வியாழனை காட்டிலும் பிரகாசமாக அமைந்துள்ளது. இந்நிலையில் வியாழன் சனி ஆகிய இரண்டு கோள்களும் நெருங்கி இணையும் அரிய காட்சி வரும் டிசம்பர் 20, 21, 22 ஆகிய மூன்று நாட்களிலும் வான்வெளியில் தோன்றவுள்ளது. தெற்கு, தென்மேற்கில் வானம் இருட்டியவுடன் பிறை நிலவு தோன்றிய சிறிது நேரத்திற்குப் பின்னர் வியாழன், சனி ஆகிய இரண்டு கோள்களையும் காணமுடியும்.
400 ஆண்டுகளுக்கு பின்னர் வியாழன், சனி ஆகிய இரண்டு கோள்களும் நெருங்கி இணையும் அரிய காட்சி.
எழுதியவர்: mohan December 7, 2020, 10:15 am




You must be logged in to post a comment.