17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருநகரில் பசும்பொன்-முத்துராமலிங்க-தேவர் வாழ்ந்து மறைந்த இல்லத்தை நினைவிடமாக மாற்ற கோரி முற்றுகைப் போராட்டம்

திருநகரில் பசும்பொன்-முத்துராமலிங்க-தேவர் வாழ்ந்து மறைந்த இல்லத்தை நினைவிடமாக மாற்ற கோரி முற்றுகைப் போராட்டம்

எழுதியவர்: mohan November 10, 2020, 12:28 pm

திருப்பரங்குன்றம் அருகே திருநகரில் பசும்பொன்-முத்துராமலிங்க-தேவர் வாழ்ந்து மறைந்த இல்லத்தை நினைவிடமாக மாற்ற கோரி முத்துராமலிங்க தேவர் அறக்கட்டளை மற்றும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது இதில் பார்வட் கட்சி தலைவர் கதிரவன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருநகர் பசும்பொன் தெருவிலுள்ள இந்திராகாந்தி மேல்நிலைப்பள்ளி உள்ளது இங்கு பசும்பொன்-முத்துராமலிங்க-தேவர் கடைசி காலத்தில் வாழ்ந்து மறைந்தார் ஆகையால் இந்த இடத்தை நினைவிடமாக மாற்ற கோரி அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் மற்றும் முத்துராமலிங்க தேவர் அறக்கட்டளையினர் முற்றுகைப் போராட்டம் நடத்துகின்றனர் இதில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் தலைவர் கதிரவன் தலைமையில் சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!