“அழகிய தமிழகம்” இது ஒரு புதுகட்சி தமிழ்நாட்டுக்கு…

சத்தியமங்கலத்தில் கிராம புறங்களிலிருந்து இருந்து புதிய அரசியல் கட்சி துவங்கியுள்ளது. கட்சியின் கொடி, சின்னம், கொள்கைகள் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது  கட்சியின் பெயர் மட்டும்வ விவசாயி ஒருவர் அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து வரும் மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர்.

மேலும் கட்சியின் தலைவர் கூறுகையில்   நமது கட்சியின் சின்னமான செருப்பு சின்னம் தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கட்சியின் தலைவர் சசிமோடி தெரிவித்துள்ளார். மேலும் கட்சியின் நிர்வாகிகளான துணைத் தலைவர் ராமச்சந்திரன், செயலாளர் ஞானசேகரன், துணைச் செயலாளர் ரமேஷ், பொருளாளர் கார்த்திக் ஆகியோரை அக்கட்சியின் தலைவர் சசிமோடி அறிமுகப்படுத்தினார்.

செய்தி:- ஜெ.அஸ்கர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!