திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள உபமின் நிலையங்களில் 04.01.2025 சனிக்கிழமை அன்று நடைபெறும் மாதந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் பாதுகாப்பு கருதி பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஊத்துமலை, கீழப்பாவூர் உப மின் நிலையங்களில் 04.01.2025 சனிக்கிழமை அன்று மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே ஊத்துமலை, கீழக்கலங்கல், குறிஞ்சான் குளம், மேல மருதப்ப புரம், சோலைச் சேரி, கருவந்தா, அமுதா புரம், மாவிலி யூத்து, கல்லத்திக் குளம், கங்கணாங் கிணறு, ருக்குமணியம்மாள் புரம், நதான் கட்டளை, துத்திக் குளம், கழுநீர் குளம், அடைக்கலப் பட்டினம், பூலான் குளம், முத்துக் கிருஷ்ணப் பேரி ஆகிய பகுதிகளில் காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை பாதுகாப்பு கருதி மின் விநியோகம் நிறுத்தப்படும்.
அதேபோல் ஆலங்குளம் உப மின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ஆலங்குளம், ஆண்டிபட்டி, நல்லூர், சிவலார் குளம், ஆண்டிபட்டி, ஐந்தான் கட்டளை, துத்திக்குளம், கல்லூத்து, குருவன் கோட்டை, குறிப்பன் குளம், அத்தியூத்து, குத்தப் பாஞ்சான், மாயமான் குறிச்சி ஆகிய பகுதிகளில் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை பாதுகாப்பு கருதி மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற் பொறியாளர் குத்தாலிங்கம் அறிவித்துள்ளார்.
தென்காசி மற்றும் செங்கோட்டை உப மின் நிலையங்களில் 04.01.2025 சனிக் கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே தென்காசி, மேலகரம், நன்னகரம், குடியிருப்பு, குற்றாலம், காசி மேஜர்புரம், இலஞ்சி, அய்யாபுரம், குத்துக் கல்வலசை, இலத்தூர், ஆயிரப்பேரி, பாட்டப்பத்து, மத்தாளம் பாறை, திரவியநகர், ராமச்சந்திர பட்டணம், மேல மெஞ்ஞானபுரம், செங்கோட்டை, கணக்கப் பிள்ளை வலசை, பெரிய பிள்ளை வலசை, பிரானூர், வல்லம், கற்குடி, புளியரை, தெற்கு மேடு, பூலாங் குடியிருப்பு, கட்டளை குடியிருப்பு ஆகிய ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் காலை 9.00 மணி முதல் மாலை 2.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
ஓ.துலுக்கப்பட்டி, வீரவநல்லூர், அம்பா சமுத்திரம், மணிமுத்தாறு, கடையம் ஆகிய உபமின் நிலையங்களில் 04.01.2025 சனிக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே ஆழ்வான் துலுக்கப்பட்டி, ஓ.துலுக்கப்பட்டி, செங்குளம், கபாலிபாறை, இடைகால், அணைந்த நாடார் பட்டி, தாழையூத்து, பனையங் குறிச்சி, நாலாங் கட்டளை, கீழக்குத்தப் பாஞ்சான், காசிதர்மம், முக்கூடல், சிங்கப்பாறை, பாப்பாக்குடி, கல்லிடைக் குறிச்சி, வீரவநல்லூர், சாட்டுப் பத்து, அரிகேசவ நல்லூர், வெள்ளாங்குளி, ரெங்க சமுத்திரம், கூனியூர், காரு குறிச்சி, அம்பா சமுத்திரம், ஊர்க்காடு, வாகைகுளம், மன்னார் கோவில், பிரம்ம தேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தியர் பட்டி, மணிமுத்தாறு, ஐமீன் சிங்கம்பட்டி, அயன் சிங்கம்பட்டி, வைராவி குளம், பொன் மாநகர், தெற்கு பாப்பான் குளம், மூலச்சி, பொட்டல், மாஞ்சோலை, ஆலடியூர், ஏர்மாள் புரம், கடையம், பண்டார குளம், கட்டேரி பட்டி, முதலியார் பட்டி, பொட்டல் புதூர், திருமலையப்ப புரம், இரவண சமுத்திரம், வள்ளியம்மாள் புரம், சிவநாடனூர், மாதாபுரம், மயிலப்புரம், வெய்காலிபட்டி, மேட்டூர் ஆகிய ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் 04.01.2025 காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என திருநெல்வேலி கல்லிடைக் குறிச்சி கோட்ட செயற் பொறியாளர் மா. சுடலையாடும் பெருமாள் தெரிவித்துள்ளார்.
110/33-11KV பழைய பேட்டை மற்றும் 33/11 KV பொருட்காட்சி திடல் துணை மின் நிலையத்தில் வருகிற 04.01.2025 சனிக் கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது. எனவே திருநெல்வேலி டவுண், மேலரத வீதி மேல் பகுதிகள், தெற்கு ரத வீதி தெற்கு பகுதிகள், வடக்கு ரத வீதி வடக்கு பகுதிகள், பழைய பேட்டை, காந்தி நகர், திருப்பணி கரிசல் குளம், வாகை குளம், குன்னத்தூர், பேட்டை, தொழிற் பேட்டை, பாட்டப் பத்து, அபிஷேகப் பட்டி, பொருட்காட்சி திடல், திருநெல்வேலி டவுண் S.N.ஹைரோடு, பூம்புகார், ஸ்ரீபுரம், சிவந்தி ரோடு, சுந்தர தெரு, பாரதியார் தெரு, C.N. கிராமம், குறுக்குத் துறை, கருப்பன் துறை, டவுண் கீழ ரத வீதி வீதி, போஸ் மார்க்கெட், A.P. மாடத்தெரு, சாமி சன்னதி தெரு, அம்மன் சன்னதி தெரு, மேல மாட வீதி, கள்ளத்தி முடுக்குத் தெரு, நயினார் குளம் ரோடு, சத்திய மூர்த்தி தெரு, போத்தீஸ் நயினார் குளம், மார்க்கெட், வ.உ.சி தெரு வையாபுரி நகர், பாரத் இந்துஸ்தான் பெட்ரோலியம், சிவன் கோவில், தெற்கு தெரு, ராம்நகர் மற்றும் ஊர் உடையான் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் 04.01.2025 காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை பாதுகாப்பு கருதி மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என திருநெல்வேலி நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் செ. முருகன் அறிவித்துள்ளார்.
110/11KV புளியங்குடி மற்றும் 110/33-11KV வீரசிகாமணி துணை மின் நிலையங்களில் 04.01.2025 சனிக் கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே புளியங்குடி, சிந்தாமணி, அய்யாபுரம், ராஜ கோபாலப் பேரி, ரத்தினபுரி, இந்திரா நகர், புன்னையா புரம், காடுவெட்டி, சிங்கிலி பட்டி, சங்கனாப் பேரி, சிதம்பரப் பேரி, சுந்தரேசபுரம், திருவேட்ட நல்லூர், சொக்கம்பட்டி, திரிகூடபுரம், மேல புளியங்குடி, முள்ளிக் குளம், தலைவன் கோட்டை, துரைசாமியா புரம், நகரம், மலையடிக் குறிச்சி, மற்றும் வெள்ள கவுண்டன் பட்டி, வீரசிகாமணி, பட்டாடை கட்டி, அருணாச்சல புரம், அரியநாயகி புரம், பாம்புக் கோவில் சந்தை, வென்றிலிங்கபுரம், திருவேட்ட நல்லூர், திருமலாபுரம், வடநத்தம் பட்டி, சேர்ந்தமரம் மற்றும் நடுவக்குறிச்சி ஆகிய பகுதிகளில் 04.01.2025 காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என கடையநல்லூர் கோட்ட செயற் பொறியாளர் பா.கற்பக விநாயக சுந்தரம் அறிவித்துள்ளார்.
சங்கரன் கோவில், பெருமாள் பட்டி உபமின் நிலையத்தில் 04.01.2025 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே சங்கரன் கோவில் நகர்பகுதி, என்.ஜி.ஓ.காலனி, களப்பா குளம், புளியம்பட்டி, வாடிக்கோட்டை, பெரியூர், மணலூர், பெரும்பத்தூர், இராமலிங்க புரம், வடக்குபுதூர், நகரம் முள்ளிக்குளம், சீவலராயனேந்தல், பெருங்கோட்டுர், அழகாபுரி ஆகிய ஊர்களுக்கும், பெருமாள்பட்டி, மாங்குடி, இனாம் கோவில்பட்டி, அருகன் குளம்புதூர், செந்தட்டியா புரம், எட்டிச்சேரி, தென் மலை, அ. சுப்பிரமணியாபுரம், இடையான் குளம், முறம்பு, ஆசிலாபுரம், கூனங்குளம், பருவக்குடி, பந்தபுளி, பி.ரெட்டியாபட்டி, தெற்கு வெங்காநல்லூர், சோலைச்சேரி, வேலாயுதபுரம் ஊர்களுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என சங்கரன்கோவில் கோட்ட செயற் பொறியாளர் மா. பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
அதே போன்று சுரண்டை மற்றும் சாம்பவர் வடகரை உப மின் நிலையங்களில் 04.01.2025 சனிக் கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக சுரண்டை, இடையர் தவணை, குலையனேரி, இரட்டைக் குளம், சுந்தர பாண்டியபுரம், பாட்டாக் குறிச்சி, வாடியூர், ஆனைக் குளம், கரையாளனூர், அச்சங் குன்றம், சாம்பவர் வடகரை, சின்னத்தம்பி நாடானூர், பொய்கை, கோவிலாண்டனூர், கள்ளம்புளி, M.C பொய்கை, துரைச்சாமிபுரம் ஆகிய ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தென்காசி கோட்ட செயற் பொறியாளர் ப. திருமலைக் குமார சாமி தெரிவித்துள்ளார்.
கோட்டை கருங்குளம் மற்றும் பணகுடி துணை மின் நிலையங்களில் வருகின்ற 04.01.2025 சனிக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப் பட்டுள்ளது. எனவே கோட்டை கருங்குளம், குமார புரம், வாழை தோட்டம், சீலாத்திகுளம், முடவன் குளம், தெற்கு கள்ளி குளம், சமூக ரெங்கபுரம், திருவெம்பலாபுரம், பணகுடி, லெப்பை குடியிருப்பு, புஷ்பவனம், குமந்தான், காவல் கிணறு, சிவகாமி புரம், தளவாய் புரம், பாம்பன் குளம், கலந்தபனை, கடம்பன் குளம் ஆகிய ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் தா. வளன் அரசு தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.