நெல்லை தென்காசி மாவட்டங்களில் இன்று மின்தடை..

தென்காசி, செங்கோட்டை, சுரண்டை மற்றும் சாம்பவர் வடகரை உபமின் நிலையங்களில் 10.09.2024 செவ்வாய்க் கிழமை (இன்று) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் தென்காசி, மேலகரம், நன்னகரம், குடியிருப்பு, குற்றாலம், காசிமேஜர்புரம், இலஞ்சி, அய்யாபுரம், குத்துக்கல்வலசை, இலத்தூர், ஆயிரப்பேரி, பாட்டப்பத்து, மத்தாளம் பாறை, திரவியநகர், ராமச்சந்திர பட்டணம், மேலமெஞ்ஞானபுரம், செங்கோட்டை, கணக்கப்பிள்ளை வலசை, பெரிய பிள்ளை வலசை, பிரானூர், வல்லம், கற்குடி, புளியரை, தெற்கு மேடு, பூலாங்குடியிருப்பு, கட்டளை குடியிருப்பு, சுரண்டை, இடையர் தவணை, குலையனேரி, இரட்டைக் குளம், சுந்தரபாண்டியபுரம், பாட்டாக்குறிச்சி, வாடியூர், ஆனைக்குளம், கரையாளனூர், அச்சங்குன்றம், சாம்பவர் வடகரை, சின்னத்தம்பி நாடானூர், பொய்கை, கோவிலாண்டனூர், கள்ளம்புளி, M.C பொய்கை, துரைச்சாமிபுரம் ஆகிய ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தென்காசி கோட்ட செயற்பொறியாளர் ப. திருமலை குமாரசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

110/11KV புளியங்குடி மற்றும் 110/33-11KV வீரசிகாமணி துணைமின் நிலையங்களில் 10.09.2024 செவ்வாய்கிழமை இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால்  புளியங்குடி, சிந்தாமணி, அய்யாபுரம், ராஜகோபாலபேரி, ரத்தினபுரி, இந்திராநகர், புன்னையாபுரம், காடுவெட்டி, சிங்கிலி பட்டி, சங்கனாப்பேரி, சிதம்பரபேரி, சுந்தரேசபுரம், திருவேட்டநல்லூர், சொக்கம்பட்டி, திரிகூடபுரம், மேல புளியங்குடி, முள்ளிகுளம், தலைவன் கோட்டை, துரைசாமியாபுரம், நகரம், மலையடிகுறிச்சி, மற்றும் வெள்ள கவுண்டன்பட்டி, வீரசிகாமணி, பட்டாடைகட்டி, அருணாச்சலபுரம், அரியநாயகிபுரம், பாம்புகோயில், வென்றிலிங்கபுரம், திருவேட்டநல்லூர், திருமலாபுரம், வடநத்தம்பட்டி, சேர்ந்தமரம் மற்றும் நடுவக்குறிச்சி ஆகிய பகுதிகளில் இன்று காலை 9.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என கடையநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் பா.கற்பக விநாயக சுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சங்கரன்கோவில், பெருமாள்பட்டி உபமின் நிலையத்தில் 10.09.2024 இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் சங்கரன்கோவில் நகர்பகுதி, என்.ஜி.ஓ.காலனி, களப்பாகுளம், புளியம்பட்டி, வாடிக்கோட்டை, பெரியூர், மணலூர், பெரும்பத்தூர், இராமலிங்கபுரம், வடக்குபுதூர், நகரம் முள்ளிகுளம், சீவலராயனேந்தல், பெருங்கோட்டுர், அழகாபுரி ஆகிய ஊர்களுக்கும், பெருமாள்பட்டி, மாங்குடி, இனாம்கோவில்பட்டி, அருகன்குளம்புதூர், செந்தட்டியாபுரம். எட்டிச்சேரி, தென்மலை, அ.சுப்பிரமணியாபுரம், இடையான்குளம், முறம்பு, ஆசிலாபுரம். கூனங்குளம், பருவக்குடி, பந்தபுளி, பி.ரெட்டியாபட்டி, தெற்கு வெங்காநல்லுார், சோலைச்சேரி, வேலாயுதபுரம் ஆகிய ஊர்களுக்கு இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படும் என சங்கரன்கோவில் கோட்ட செயற்பொறியாளர் மா.பாலசுப்ரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊத்துமலை, ஆலங்குளம் மற்றும் கீழப்பாவூர் உப மின் மின் நிலையங்களில் 10.09.2024 செவ்வாய் கிழமை இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் ஊத்துமலை, கீழக்கலங்கல், குறிஞ்சான்குளம், மேல மருதப்பப்புரம், சோலைசேரி, கருவந்தா, அமுதா புரம், மாவிலியூத்து, கல்லத்திக்குளம், கங்கணாங்கிணறு, ருக்குமணியம்மாள்புரம், ஆலங்குளம், ஆண்டிபட்டி, நல்லூர், சிவலார்குளம், ஆண்டிபட்டி, ஐந்தான்கட்டளை, துத்திக்குளம், கல்லூத்து, குருவன் கோட்டை, குறிப்பன்குளம், அத்தியூத்து, குத்தபாஞ்சான், மாயமான்குறிச்சி, கழநீர்குளம், அடைக்கலப்பட்டிணம், பூலான் குளம், முத்துகிருஷ்ணபேரி ஆகிய ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் G.குத்தாலிங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துலுக்கப்பட்டி, வீரவநல்லூர், அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, கடையம் ஆகிய உபமின் நிலையங்களில் 10.09.2024 செவ்வாய்கிழமை (இன்று) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மேற்கண்ட உபமின் நிலையங்களில் மின்விநியோகம் தடை செய்யப்படும். ஆழ்வான் துலூக்கப்பட்டி, ஓ.துலுக்கப்பட்டி, செங்குளம், கபாலிபாறை, இடைகால், அணைந்தநாடார் பட்டி, தாழையூத்து, பனையங்குறிச்சி, நாலாங்கட்டளை, கீழக்குத்தப்பாஞ்சான்,காசிதர்மம், முக்கூடல், சிங்கப்பாறை, பாப்பாக்குடி கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சாட்டுப்பத்து, அரிகேசவநல்லூர், வெள்ளாங்குளி, ரெங்கசமுத்திரம், கூனியூர், காருகுறிச்சி, அம்பாசமுத்திரம், ஊர்க்காடு, வாகைகுளம், மன்னார்கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தியர்பட்டி, மணிமுத்தாறு, ஜமீன் சிங்கம்பட்டி, அயன் சிங்கம்பட்டி, வைராவிகுளம், பொன்மாநகர், தெற்கு பாப்பான்குளம், மூலச்சி, பொட்டல், மாஞ்சோலை, ஆலடியூர், ஏர்மாள்புரம், கடையம், பண்டாரகுளம், கட்டேரிபட்டி, முதலியார்பட்டி, பொட்டல்புதூர், திருமலையப்பபுரம், இரவணசமுத்திரம், வள்ளியம்மாள்புரம், சிவநாடனூர், மாதாபுரம், மயிலப்புரம், வெய்காலிபட்டி, மேட்டூர் ஆகிய ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என திருநெல்வேலி கல்லிடை குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் மா.சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!