நெல்லை தென்காசி மாவட்டங்களில் (நவ.02) மின்தடை..

நெல்லை, தென்காசி மாவட்ட உபமின் நிலையங்களில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக 02.11.2024 அன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த மின்வாரிய செய்திக்குறிப்பில் பின்வரும் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தென்காசி, செங்கோட்டை, சுரண்டை மற்றும் சாம்பவர் வடகரை உப மின் நிலையங்களில் 02.11.2024 சனிக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் தென்காசி, மேலகரம், நன்னகரம், குடியிருப்பு, குற்றாலம், காசிமேஜர்புரம், இலஞ்சி, அய்யாபுரம், குத்துக்கல் வலசை, இலத்தூர், ஆயிரப்பேரி, பாட்டப்பத்து, மத்தாளம் பாறை, திரவியநகர், ராமச்சந்திர பட்டணம், மேலமெஞ்ஞானபுரம், செங்கோட்டை, கணக்கப்பிள்ளை வலசை, பெரியபிள்ளை வலசை, பிரானூர், வல்லம், கற்குடி, புளியரை, தெற்குமேடு, பூலாங்குடியிருப்பு, கட்டளை குடியிருப்பு, சுரண்டை, இடையர் தவணை, குலையனேரி, இரட்டைக்குளம், சுந்தர பாண்டியபுரம், பாட்டாக்குறிச்சி, வாடியூர், ஆனைக்குளம், கரையாளனூர், அச்சங்குன்றம், சாம்பவர் வடகரை, சின்னத்தம்பி நாடானூர், பொய்கை, கோவிலாண்டனூர், கள்ளம்புளி, M. C பொய்கை, துரைச்சாமிபுரம் ஆகிய ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தென்காசி கோட்ட செயற்பொறியாளர் ப. திருமலைக்குமாரசாமி தெரிவித்துள்ளார்.

110/11KV புளியங்குடி மற்றும் 110/33-11KV வீரசிகாமணி துணைமின் நிலையங்களில் 02.11.2024 சனிக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை புளியங்குடி, சிந்தாமணி, அய்யாபுரம், ராஜகோபாலபேரி, ரத்தினபுரி, இந்திராநகர், புன்னையாபுரம், காடுவெட்டி, சிங்கிலிபட்டி, சங்கனாப்பேரி, சிதம்பரபேரி, சுந்தரேசபுரம், திருவேட்டநல்லூர், சொக்கம்பட்டி, திரி கூடபுரம், மேல புளியங்குடி, முள்ளிகுளம், தலைவன் கோட்டை, துரைசாமியாபுரம், நகரம், மலையடிகுறிச்சி மற்றும் வெள்ள கவுண்டன்பட்டி, வீரசிகாமணி, பட்டாடைகட்டி, அருணாச்சலபுரம், அரியநாயகிபுரம், பாம்புகோவில் சந்தை, வென்றிலிங்கபுரம், திருவேட்டநல்லூர், திருமலாபுரம், வடநத்தம்பட்டி, சேர்ந்தமரம் மற்றும் நடுவக்குறிச்சி ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என கடையநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் பா.கற்பக விநாயகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

பெருமாள்பட்டி உபமின் நிலையத்தில் 02.11.2024 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், 02.11.2024 அன்று பெருமாள்பட்டி, மாங்குடி, இனாம் கோவில்பட்டி, அருகன்குளம் புதூர், செந்தட்டியாபுரம், எட்டிச்சேரி, தென்மலை, அ.சுப்பிரமணியாபுரம், இடையான் குளம், முறம்பு, ஆசிலாபுரம், கூனங்குளம், பருவக்குடி, பந்தபுளி, பி.ரெட்டியாபட்டி, தெற்கு வெங்காநல்லுார், சோலைச்சேரி, வேலாயுதபுரம் ஊர்களுக்கும் மின்விநியோகம் தடை செய்யப்படும் எனவும், மேலும் பராமரிப்பு சமயத்தில் பொதுமக்கள் மின்வாரிய பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு நல்கிடவும் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது என சங்கரன்கோவில் கோட்ட செயற் பொறியாளர் மா.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

ஊத்துமலை, ஆலங்குளம் மற்றும் கீழப்பாவூர் உப மின் மின் நிலையங்களில் 02/11/2024 சனிக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் ஊத்துமலை, கீழக்கலங்கல், குறிஞ்சான்குளம், மேலமருதப்பப்புரம், சோலைச்சேரி, கருவந்தா, அமுதாபுரம், மாவிலியூத்து, கல்லத்திக்குளம், கங்கணாங்கிணறு, ருக்குமணியம்மாள் புரம், ஆலங்குளம், ஆண்டிபட்டி, நல்லூர், சிவலார்குளம், ஆண்டிபட்டி, ஐந்தான் கட்டளை, துத்திக்குளம், கல்லூத்து, குருவன்கோட்டை, குறிப்பன்குளம், அத்தியூத்து, குத்தபாஞ்சான், மாயமான்குறிச்சி, கழநீர்குளம், அடைக்கலப்பட்டிணம், பூலான்குளம், முத்து கிருஷ்ணப்பேரி ஆகிய ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இத்தகவலை திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் G.குத்தாலிங்கம் தெரிவித்துள்ளார்.

தாழையூத்து உப மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக 04/11/2024 திங்கள் கிழமை அன்று மின்விநியோகம் தடை செய்யப்படும். எனவே மானூர் வட்டாரம், தாழையூத்து, சேதுராயன் புதூர், ராஜவல்லிபுரம், ரஸ்தா, தச்சநல்லூர், தென்கலம்புதூர், நாஞ்சான்குளம், தென்கலம், மதவகுறிச்சி ஆகிய ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற் பொறியாளர் G.குத்தாலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!