நெல்லையில் “தீமையை எதிர்த்து போராடு” எனும் தலைப்பில் ஓவியப் போட்டி..
நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான சிறப்பு ஓவியப் போட்டி நடந்தது. நெல்லை அரசு அருங்காட்சியகமும், சென்னை எப்சிபா அறக்கட்டளை மற்றும் ஹெப்சிபா பாரம்பரிய பாதுகாப்பு நிறுவனமும் இணைந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு “தீமையை எதிர்த்து போராடு” என்ற தலைப்பில் ஓவியப் போட்டியை நடத்தினர். இப்போட்டியினை நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ. சத்திய வள்ளி தொடங்கி வைத்தார்.
எல்.கே.ஜி படிக்கும் மாணவர்கள் முதல் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் என ஏராளமான மாணவ மாணவிகள் இப்போட்டியில் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு அழகிய ஓவியங்களை வரைந்தனர். போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்களும், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் மகளிர் தினத்தை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் நடைபெறும் சிறப்பு நிகழ்வில் வழங்கப்படும் என நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ. சத்திய வள்ளி தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









