நெல்லை மாவட்டம் குறும்பலாப்பேரியில் குளம் போன்று காட்சியளிக்கும் உடைந்த சாலைகள்…

நெல்லை மாவட்டம் குலசேகரப்பட்டி ஊராட்சி குறும்பலாப்பேரி கிராமத்தின் சாலைகள் ஆபத்துகள் நிறைந்த நிலையில் குண்டும் குழியுமாய் காணப்படுகிறது. இதனால் சாலை விபத்துகள் அதிகமாக ஏற்படுகிறது.

இந்த சாலை வழியே பள்ளி குழந்தைகளும், முதியோர்களும், பள்ளிவாகனங்களும் செல்லும் நிலை உள்ளது. இந்த சாலையில் உள்ள குண்டு குழிகளை சரிசெய்ய இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் இந்நிலையை கவனத்தில் கொண்டு தேவையான நடவடிக்கை விரைந்து எடுத்திட இப்பகுதி மக்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!