நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பகுதியில் உள்ள அலங்கார் சினிமா தியேட்டரில் இன்று அதிகாலையில் அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
அதில் அடையாளம் தெரியாத நபர்கள் இருவர் தியேட்டரை நோக்கி பெட்ரோல் குண்டு வீசும் காட்சி பதிவாகி உள்ளது. இந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், போலீசார் விசாரணை முடிவுகள் வருவதற்கு முன்னதாகவே, யூகங்களின் அடிப்படையில் ஆதாரமற்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment.