செங்கோட்டை பகுதியில் மூன்று நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது..

செங்கோட்டை பகுதியில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த மூன்று நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டம், செங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அடிதடி, திருட்டு போன்ற தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த செங்கோட்டை விஸ்வநாதபுரத்தைச் சேர்ந்த அஜ்மீர் காஜா ஷெரிப் (30), முஸ்தபா கமால் (30) மற்றும் சக்தி பிரபாகரன் (23) ஆகிய நபர்களை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க செங்கோட்டை வட்ட காவல் ஆய்வாளருக்கு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS அறிவுறுத்தியதன் பேரில், மேற்படி நபர்கள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பேரில், மேற்படி செங்கோட்டை விஸ்வநாதபுரம் பாரதி நகரைச் சேர்ந்த நூருதீன் என்பவரின் மகன் அஜ்மீர் காஜா ஷெரிப் (30), செங்கோட்டை பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த பீர்முகம்மது என்பவரின் மகன் முஸ்தபா கமால் (30), செங்கோட்டை செல்வ விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவரின் மகன் சக்தி பிரபாகரன் (23) ஆகியோரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுப்புக் காவல் உத்தரவு ஆணையை 05.04.2022 அன்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் செங்கோட்டை வட்ட காவல் ஆய்வாளர் ஷியாம் சுந்தர் சமர்பித்தார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!