செங்கோட்டை நூலகத்தில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா..

நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா செங்கோட்டை நூலகத்தில் நடந்தது. நூலக வாசகர் வட்டத் தலைவர் ராமகிருஷ்ணன் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். தென்காசி மாவட்டம் செங்கோட்டை நூலகத்தில் எஸ்ஆர்எம் அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகள் லோகேஸ்வரி,சுபாஸ்ரீ, ஐஸ்வர்யா ,பாத்திமா சைனியா, சீதாதேவி ஆகிய 5 மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு வாசகர் வட்டத் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கி மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். மேலும் வாசகர் வட்ட துணைத் தலைவர் ஆதிமூலம் ,எஸ்ஆர்எம் பள்ளி ஆசிரியர் வேலாயுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாசகர் வட்ட இணைச் செயலாளர் செண்பக குற்றாலம்வரவேற்புரையாற்றினார். விழுதுகள் சேகர், தென்காசி வருவாய் ஆய்வாளர் முத்துக்குமார், ஓவிய ஆசிரியர் முருகையா, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் குற்றாலிங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் நூலகர் ராமசாமி நன்றி கூறினார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!