கடையநல்லூரில் இலவச இ-சேவை முகாம் நடத்திய எஸ்டிபிஐ கட்சியினர்..

கடையநல்லூர் பகுதியில் எஸ்டிபிஐ கட்சியினர் இலவச இ-சேவை முகாம் நடத்தினர். இதில் பொது மக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் ரஹ்மானியாபுரம் 6-வது வார்டு எஸ்டிபிஐ கட்சி மக்கா நகர் கிளை சார்பாக இலவச இ-சேவை முகாம் நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக SDTU தென்காசி மாவட்ட தொழிற்சங்க தலைவர் I.ராஜா முகமது கலந்து கொண்டார். மக்கா நகர் பகுதியில் அதிகமான மக்கள் வெளியூரை சேர்ந்தவராக இருப்பதால் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ரேஷன் பொருட்களை பெறுவதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு மக்கா நகர் கிளை சார்பாக இலவச இ- சேவை முகாம் நடத்தப்பட்டது.இதில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன் பெற்றனர்.மேலும் இது போன்ற இ-சேவை முகாம் மீண்டும் நடைபெற வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் வைத்தனர்.இந்த நிகழ்வில் கிளை தலைவர் ஷாபா சேக், கிளை செயலாளர் தாஜ்தீன் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த முகாமிற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் பாராட்டு மற்றும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு முகாம் நிறைவுற்றது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!