மனநலம் பாதிக்கப்பட்டவர் காவல்துறை உதவியுடன் மீட்பு.

கடையநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்டவர் காவல்துறை உதவியுடன் மீட்கப்பட்டார். தென்காசி மாவட்டம், கடையநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பல நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்டு ஆதரவற்ற திரிந்த நபரை கடையநல்லூர் சார்பு ஆய்வாளர் கனகராஜ், தலைமை காவலர் பன்னீர்செல்வம், வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை சேர்ந்த சேக் உசேன் மற்றும் நீட் பார் சர்வீஸ் நிறுவனர் கோபி ஆகியோர் இணைந்து மனநலம் பாதிக்கப்பட்ட நபரை அன்னை தெரசா ஸ்டார் பவுண்டேஷன் இல்லத்தில் பாதுகாப்பாக சேர்த்தனர். காவல் துறையினர் மற்றும் தன்னார்வலர்களின் இத்தகைய மனித நேயமிக்க செயலை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!