தென்காசியில் உயர் கோபுர மின் விளக்கு பழுதுவிரைந்து சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை..

தென்காசியில் பழுதாகி உள்ள உயர் கோபுர மின் விளக்கை விரைந்து சரி செய்யுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்காசி மேலமாசி வீதியில் வேன் ஸ்டாண்ட் பகுதியில் உயர் கோபுர மின் விளக்கு பழுதாகி கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக சரி செய்யப்படாமல் உள்ளது. பொதுமக்கள் அதிகமானோர் பயன்படுத்தும் இந்த பகுதி கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக இருளடைந்து கிடப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர். தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார் கடந்த புதன் கிழமை தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட மலையான் தெரு மற்றும் சிந்தாமணி ஆகிய பகுதிகளில் புதிதாக உயர் கோபுர மின் விளக்குகள் அமைத்திருப்பதை பாராட்டும் தென்காசி நகர பொதுமக்கள், தென்காசி வேன்  ஸ்டாண்ட் பகுதியில் பழுதடைந்த இந்த உயர் கோபுர மின் விளக்கையும் தென்காசி நகராட்சி நிர்வாகம் சீரமைத்தால் பொது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்தனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!