நெல்லையிலிருந்து இயக்கப்படும் ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே செல்லும்-தெற்கு ரயில்வே அறிவிப்பு

நெல்லையிலிருந்து சென்னை செல்லும் ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. எனவே 10.10.2019 முதல் 07.12.2019 வரை ரயில் எண் 12631/12632 சென்னை – திருநெல்வேலி, சென்னை -நெல்லை எக்ஸ்பிரஸ், சென்னை – செங்கோட்டை – சென்னை-பொதிகை எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே மதுரை பிரிவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!