தென்காசி மாவட்டத்தில் புதிய கலெக்டர் அதிரடி ஆய்வு; பொதுமக்கள் பாராட்டு..

தென்காசி மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக பதவியேற்ற கோபால சுந்தர்ராஜ் ஐஏஎஸ் பதவியேற்ற முதல் நாளிலேயே ராமநதி அணை பகுதி மற்றும் பாசன பகுதிகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டார். பாசனப் பகுதியில் உள்ள விவசாயிகளிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்த கலெக்டர் உடனடியாக சரி செய்வதாக உத்தரவாதம் அளித்தார்.

மேலும் கடையம் ஏ ஆர் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த கொரோனா நோயாளிகளின் மருத்துவ முகாமை அதிரடியாக ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர் கோபால சுந்தர்ராஜ் நேரடியாக அங்கிருந்த கொரோனா நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். இவ்வாறு அதிரடியாக பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார்.மேலும் புதிய மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தர்ராஜ் ஐஏஎஸ்-ன் அதிரடி நடவடிக்கைகளை சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் வெகுவாக பாராட்டினர். பதவியேற்ற முதல் நாளிலேயே அதிரடி ஆய்வுகளை மேற்கொண்டு பல்வேறு மக்கள் நல பணிகளை துரிதப்படுத்திய மாவட்ட ஆட்சியரின் பணிகள் வெகு சிறப்பாக நடைபெறும் என்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்ட ஆட்சியரின் பணி சிறக்க பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!