ஆய்க்குடி தேர்வுநிலை பேரூராட்சியில் உலக மலேரியா தின விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு..

உலக மலேரியா தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கூட்டம் மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி ஆய்க்குடியில் நிர்வாக அதிகாரி மாணிக்கராஜா தலைமையில் நடந்தது.தென்காசி மாவட்டம் ஆய்க்குடி தேர்வுநிலை பேரூராட்சியில் உலக மலேரியா தினத்தை முன்னிட்டு  விழிப்புணர்வு கூட்டம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ஆய்க்குடி பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி செயல் அலுவலர் ஜா.மாணிக்கராஜ் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மலேரியா நோய் தொடர்பான அறிகுறிகள் மற்றும் பாதிப்புகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது.கூட்டத்தில் செங்கோட்டை வட்டார மருத்துவ அலுவலர்.மாரீஸ்வரி, உதவி மருத்துவர் .சுந்தரம்மாள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கதிவரன், சுகாதார ஆய்வாளர்கள், மாரியப்பன், சிலம்பரசன், கணேசன், பேரூராட்சி பரப்புரையாளர்கள் அனைத்து பணியாளர்கள் மற்றும் டெங்கு மஸ்துர் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் ஆய்க்குடி பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் (பொ) .ச.தர்மர் நன்றி கூறினார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!