காணாமல் போன சிறுவன் ஒரு மணி நேரத்தில் மீட்பு; காவல்துறைக்கு பொதுமக்கள் பாராட்டு.

தென்காசி மாவட்டம் புளியங்குடி காவல் நிலைய எல்லைக் குட்பட்ட பகுதியில் நடைபெறும் தனது உறவினரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திருச்சி உறையூரிலிருந்து முஸ்தபா என்பவர் தனது மனைவி மற்றும் நான்கு வயது மகன் முகமது முஷரப் ஆகியோருடன் புளியங்குடி வந்துள்ளார். அப்போது திடீரென அவரது 4 வயது மகன் காணாமல் போய் விட்டதாக புளியங்குடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் ராஜாராம் தலைமையிலான காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு 1-மணி நேரத்திற்குள் சிறுவனை கண்டுபிடித்து அவரின் பெற்றோரிடம் ஒப்படைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். சிறுவனை கண்டுபிடிக்க உதவியாக இருந்த புளியங்குடி சாரல் ரெடிமேட் முகமது மற்றும் முகமது முத்தலிப் ஆகியோரை காவல் ஆய்வாளர் அவர்கள் பாராட்டினார்.மேலும் காணாமல் போன சிறுவனை துரிதமாக செயல்பட்டு 1 மணி நேரத்திற்குள் கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்த புளியங்குடி காவல் துறையினரை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!