தென்காசி மாவட்டம் சுரண்டை குறுவட்டம், சிவகுருநாதபுரம் கிராமம், காமராஜர் நகரை சேர்ந்தவர் பரமசிவன் என்பவரது மகன் திருமலை (வயது -13) . இவர் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவரும் சிவகுருநாதபுரம் மெயின் ரோட்டை சேர்ந்த
தனுஷ்கோடி என்பவரது மகன் சுரண்டை காமராஜர் அரசு கல்லூரியில் பிஏ முதலாமாண்டு பயின்று வரும் கருப்பசாமி (வயது-19) என்பவரும் பிற்பகல் 2:30 மணி அளவில் புது பள்ளிவாசல் தெரு பகுதியில் பாண்டி என்பவருக்கு சொந்தமான கோழிப் பண்ணையின் மாடியில் அமர்ந்து அருகில் உள்ள தென்னை மரத்தில் தேங்காய் பறித்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது கோழிப்பண்ணை மாடியின் மேற்கு சுவரை ஒட்டி செல்லும் மின்சாரக் கம்பியில் உடல் பட்டு மின்சாரம் தாக்கி இருவரும் தூக்கி எறியபட்டதில் சிறுவன் திருமலை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த கருப்பசாமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு உரிய சிகிச்சை அளிக்கும் பொருட்டு தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சம்பவம் குறித்து அறிந்த சுரண்டை எஸ்ஐ ஜெயராஜ் தலைமையிலான போலீசார் மற்றும் ஆர்ஐ மாரியப்பன் ஆகியோர் விரைந்து சென்று இறந்த சிறுவனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வு செய்யும் பொருட்டு தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து சுரண்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்


You must be logged in to post a comment.