தமிழை காணோம்; சுரண்டை எஸ்பிஐ வங்கியில் நாம் தமிழர் கட்சியினர் மனு அளித்ததால் பரபரப்பு…

சுரண்டை எஸ்பிஐ வங்கியில் “தமிழை காணோம்” என நாம் தமிழர் கட்சியினர் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி மாவட்டம் சுரண்டை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கிளையில் செல்லான் மற்றும் படிவங்களில் தமிழ் மொழி இல்லாமல் இருப்பது குறித்தும்,

அனைத்து படிவங்கள் மற்றும் அறிவிப்புகளில் தமிழ் மொழி இடம் பெறவும், மேலும் தமிழ் மொழியில் இல்லாததால் ஏழை மற்றும் படிப்பறிவு இல்லாத முதியவர்கள் ஏமாற்றப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறியதோடு, தமிழ் மொழி புறக்கணிப்பை கைவிட வலியுறுத்தி ஸ்டேட் வங்கி கிளை மேலாளரிடம் நாம் தமிழர் கட்சியினர் மனு அளித்தனர். இதில் தென்காசி சட்டமன்றத் தொகுதி தலைவர் அழகுபாண்டியன், தொகுதி செயலாளர் வின்சென்ட் ராஜ், இனை செயலாளர் சுந்தரபாண்டியன், துணை செயலாளர்  ராஜா, நகர செயலாளர் சீனிவாசன், பாலா,  செய்தி தொடர்பாளர் ராஜன், சரத்குமார், பழனி கண்ணன், திருமுருகன், பிரமநாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!