நெல்லையில் அனைத்து சமுதாய நல்லிணக்க பொது கூட்டம்..

நெல்லையில் அனைத்து சமுதாய நல்லிணக்க விழிப்புணர்வு பொதுக்கூட்டம் காவல் உதவி ஆணையர் தலைமையில் நடைபெற்றது. அனைத்து சமுதாய மக்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.நெல்லை மாவட்டம் பேட்டை அருகே மலையாளன் மேடு எனும் ஊரில் அங்கன்வாடி வளாகத்தில் வைத்து அனைத்து சமுதாய மத நல்லிணக்க விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நெல்லை மாநகர காவல்துறை சார்பில் நடைபெற்றது.நிகழ்ச்சியை நெல்லை மாநகர காவல் உதவி ஆணையர் சேகர் ( சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ) தலைமையேற்று நடத்தினார்.நல்லிணக்க கூட்டத்தில் கலந்து கொண்ட மலையாளன் மேடு பகுதி அனைத்து சமுதாய மக்கள் ,சமுதாய தலைவர்கள் முன்னிலையில் கொரோனா வைரஸ் ஒழிப்பு தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வினை காவல் உதவி ஆணையர் சேகர் ஏற்படுத்தினார்.

மத நல்லிணக்கம் மூலம் ஊரின் பொதுநலக் கருத்துக்களையும் குறைகளையும் கேட்டறிந்தார், அரசு திட்டங்கள் மூலம் மக்களுக்கு கிடைக்கும் பல்வேறு சலுகைகள் அதனை பயன்படுத்தி கொள்ளும் வழிமுறைகள் குறித்து விளக்கி கூறினார். இந்நிகழ்ச்சியை நடத்திய காவல் துறைதின் பொது கூட்டத்திற்கு வந்திருந்த பொதுமக்கள் மற்றும் ஊர் தலைவர்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் டவுண் காவல் ஆய்வாளர் ராமேஸ்வரி , பேட்டை காவல் உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி, நெல்லை மாநகர சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் காவல் ஆளினர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்தி

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!