நெல்லையில் எஸ்டிபிஐ கட்சியினர் வினோத போராட்டம்-பாய் தலையணையுடன் வந்ததால் பரபரப்பு..

நெல்லையில் பாய் தலையணையுடன் எஸ்டிபிஐ கட்சியினர் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் 29-வது வார்டு மக்களின் அடிப்படை வசதிகளை செய்து தர மறுப்பதாக மாநகராட்சியை கண்டித்து மேலப்பாளையம் மண்டல மாநகராட்சி அலுவலகத்தில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் பாய் தலையணையுடன் வந்து குடியேறும் போராட்டம் நடத்தினர்.தொகுதி தலைவர் கே.எம்.எஸ்.எம்.புகாரி சேட் தலைமையில் நடைபெற்ற இந்த வினோத போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக எஸ்டிபிஐ கட்சி மாநகர் மாவட்ட பொதுச் செயலாளர் ஹயாத் முகம்மது கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார்.நெல்லை மாநகர் மாவட்ட, தொகுதி, நகர நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் பாய், தலையணையுடன் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!