வள்ளியூர் அருகே தி.மு.க. பிரமுகர் நள்ளிரவில் வெட்டிக்கொலை; காவல்துறை விசாரணை…

வள்ளியூர் அருகே திமுக பிரமுகர் மர்ம கும்பலால் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். சிகிச்சைக்காக மருத்துவமனை செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நெல்லை மாவட்டம் தெற்கு வள்ளியூரை சேர்ந்தவர் முத்துராமன் ( 35 ) , தி.மு.க. , மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக இருக்கும் இவர் தற்போது தனது குடும்பத்தினருடன் வடக்கு வள்ளியூரில் குடியிருந்து வருகிறார் . சம்பவம் நடந்த நேற்று இரவு நண்பர்களை வள்ளியூரிலிருந்து இருந்து தெற்கு வள்ளியூருக்கு காரில் அழைத்து வந்தார். தெற்கு வள்ளியூர் அருகே சென்ற போது நடுரோட்டில் பேரல் வைத்து தடுப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது . இதனால் முத்துராமன் காரைவிட்டு இறங்கி தடுப்பை அகற்ற முயன்றார். அப்போது அந்த பகுதியில் மறைந்திருந்த மர்ம கும்பல் முத்துராமனை வெட்டியது.

இதில் படுகாயமடைந்த முத்துராமன் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார் . செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து அவரது உடல் பிரேத பரி சோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முத்துராமன் அரசியல் போட்டியில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் . இச்சம்பவம் வள்ளியூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!