சுரண்டையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு-தடுப்பு கண்காணிப்பு பணிகள் தீவிரம்…

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தென்காசி மாவட்டம் சுரண்டையில் மட்டும் இதுவரை 220 பேர் இத் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 132 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 5 பேர் உயிரிழந்துள்ளனர். 80க்கும் அதிகமானோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சுரண்டை பகுதியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து சுகாதார துறை, வருவாய்த் துறை, பேருராட்சி மற்றும் காவல்துறை சார்பில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தும் பணி நடந்து வருகிறது. வீடு வீடாக ஆய்வு மேற்க் கொள்வதுடன் சிறப்பு மருத்துவ முகாம்களும் கொரோனா பரிசோதனை முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!