வீராணம் ரஜினி மன்றம் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நிவாரண உதவி வழங்கல்…

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள வீராணம் ரஜினி மக்கள் மன்றம் சார்பில், கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள், தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, காய்கறிகள், மசாலா பொருட்கள், முககவசம் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி ரஜினி மக்கள் மன்ற மாவட்ட ஊடக பிரிவு தலைவர் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் வாடியூர் விஏஓ ஆறுமுகம் கலந்து கொண்டு நிவாரண பொருட்கள் வழங்கி கொரோனா தடுப்பு முறைகள் குறித்து விளக்கி பேசினார். இதில், அமல்ராஜ், மகளிரணி மாரியம்மாள், ஆசிரியர் ஜெயராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.முன்னதாக சுரண்டை மற்றும் வீகேபுதூர் போலீசாருக்கு முககவசம், கையுறை, மற்றும் சானிடைசர்கள் வழங்கப்பட்டது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!