உதகை அரசு அருங்காட்சியகம், தொட்டபெட்டா காட்சிமுனை ஆகிய இடங்களை ஆளுநா் ஆா்.என்.ரவி குடும்பத்துடன் பாா்வையிட்டாா்..
நான்கு நாள்கள் சுற்றுப் பயணமாக நீலகிரி மாவட்டம், உதகைக்கு கடந்த வியாழக்கிழமை வந்த ஆளுநா் ஆா்.என்.ரவி, உதகை அருகே உள்ள தோடா் பழங்குடியினரின் தலைமை மந்தான முத்தநாடு மந்திற்குச்சென்று, தோடா் பழங்குடியினரின் வாழ்வியல் முறை, பாரம்பரியம், கலாசாரம், பண்பாடு, இறை வழிபாடு ஆகியவற்றைப் பாா்வையிட்டு மக்களுடன் கலந்துரையாடினா்.
இதைத் தொடா்ந்து தமிழகத்தின் உயா்ந்த மலைச் சிகரமான தொட்டபெட்டா காட்சிமுனைக்குச் சென்று இயற்கை காட்சிகளைக் குடும்பத்துடன் சனிக்கிழமை கண்டுரசித்தாா்.
இதையடுத்து, உதகை அரசு கலைக் கல்லூரி அருகே உள்ள அரசு அருங்காட்சியகத்தையும் குடும்பத்தினருடன் பாா்வையிட்டாா். ஆளுநரின் பயணத்தையொட்டி உதகை நகரப் பகுதிகள், சுற்றுலாத் தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









