கீழக்கரை சதக் பாலிடெக்னிக் கல்லூரியும், தேசிய மாணவர் தரை படையும் இணைந்து “தேசிய இளைஞர் தினம்” கல்லூரி அரங்கத்தில் கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக முனைவர் சுந்தரம், இந்தியன் ரெட் கிராஸ் சேர்மன், கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ஏ.சேக் தாவூது, இயந்திரவியல் துறைத் தலைவர் ஜெ.கணேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். தேசிய மாணவர் தரைப்படை செயலர் ப்பி.மருதாச்சலமூர்த்தி் வரவேற்புரை நிகழ்த்தினார். ஜே.எபன் பர்வீன் நன்றியுரை வழங்கினார். இதைத் தொடர்ந்து கல்லூரியின் தேசிய தரைப்படை மாணவர்கள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் கல்லூரி முதல்வர் மர கன்றுகளை நட்டனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தேசிய மாணவர் தரை படை அலுவலர் செய்திருந்தார்.
You must be logged in to post a comment.