வேலூர் சத்துவாச்சாரியில் ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டி கொலை..

வேலூர் சத்துவாச்சாரி விஜயராகவபுரம் பகுதியை சேர்ந்த கோவிந்தனின் மகன் செல்வராஜ் (36) இவன் மீது கோவில் தேரை எரித்த வழக்கு, மாமனாரை கொன்ற வழக்கு, காதலி குடும்பத்தை கொலை செய்ய வெடிகுண்டு தயாரித்த வழக்கு ஆகியவை உள்ளன.

இந்நிலையில் நேற்று (20/04/2019) இரவு சத்துவாச்சாரி ஆவின் பாலகம் அருகே மர்ம நபர்கள் ரவுடி செல்வராஜை ஓட ஓடவிரட்டி படுகொலை செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சத்துவாச்சாரி போலீசார்ப பிரேதத்தை கைப்பற்றி பின்பு விசாரணை செய்து வருகின்றனர்

கே.எம்.வாரியார்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!