இராமநாதபுரம், செப்.29 –
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உப்பிலான்வலசை அண்ணா நகரைச் சேர்ந்தவர் லட்சுமணன், 32. குடி போதையில் நேற்று காலை வீடு திரும்பிய இவர், அவரது பாட்டி மாரியம்மாளிடம்(88) பணம் கேட்டதாக கூறப்படுகிறது. பணமில்லை என மாரியம்மாள் கூறியுள்ளார். இதனால் மாரியம்மாளுடன் லட்சுமணன் வாக்குவாதம் செய்தார். அப்போது உடனிருந்த அவர்களது உறவக்கார பெண் ஒருவர் ஹலோ போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதன்படி கீழக்கரை போலீசார் அண்ணா நகருக்கு வந்தனர். அப்போது மாரியம்மாள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். வீட்டில் இருந்த டிவி உடைந்து, அதில் ரத்த தடயம் காணப்பட்டது. இதைதொடர்ந்து போலீசார் கைப்பற்றிய மாரியம்மாள் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது தொடர்பாக கீழக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து, மாரியம்மாள் இறப்பிற்கான காரணம் குறித்து லட்சுமணனிடம் விசாரித்து வருகின்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









