கீழக்கரையில் முதியவருக்கு கத்திக்குத்து… மரணம்.. ஒருவர் கைது…

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை தட்டான் தோப்பு தெருவை சேர்ந்த சிவனடிமை மகன் தவசி வயது 55 என்பவரை அப்பகுதியில் வசிக்கும் முத்துச்சாமியின் மகன் சேகர் வயது 45 என்பவர் முன்விரோத காரணமாக கத்தியால் வயிற்றுப் பகுதியில் குத்தி விட்டார்.அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு உடனடியாக கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். முதலுதவி அளித்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் செல்லும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது என மருத்துவர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம்தை தொடர்ந்து கீழக்கரை காவல் துறை துணை கண்காணிப்பாளர் முருகேசன் தலைமையிலான போலீஸார்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குற்றவாளி சேகரை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்பு ராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் கார்த்திக் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டார்.

கீழை நியூஸ் SKV முகம்மது சுஐபு

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!