கீழக்கரை நகராட்சி ஆய்வாளர் அதிரடி சோதனை – குட்கா, பான்பராக் பறிமுதல்..

தமிழகத்தில் சிகரெட், பான்பராக் மற்றும். குட்கா போன்ற பொருட்கள் விற்பனை செய்ய பல கட்டுபாடுகளை அரசு விதித்துள்ளது.  அதிலும் முக்கியமாக பள்ளிகள் மற்றும் கல்லூரி வளாகங்கள் உள்ள பகுதியில் 200 மீட்டர் தொலைவிற்குள் விற்பதற்கு முழுமையான தடை உள்ளது.

இதன் அடிப்படையில் இன்று கீழக்கரை நகராட்சி ஆய்வாளர் திண்ணாநிரமூர்த்தி தலைமையில் பல வியாபார ஸ்தலங்களில் சோதனை நடைபெற்றது.  இச்சோதனையில் பான்பராக், குட்கா போன்ற பொருட்கள் மூடை மூடையாக கைப்பற்றப்பட்டது. இந்தப் பொருட்கள் கீழக்கரையில் பழமையான பள்ளிக்கு அருகில் உள்ள கடைகளில் இருந்து கைபற்ற பட்டது குறிப்பிடத்தக்கது.


Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!