முதுகுளத்தூரில் முதலமைச்சர் பிறந்தநாள் விழா !

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூர் திமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பேரூராட்சி சேரமன் ஏ.ஷாஜஹான் தலைமையில் தூய்மை பணியாளர்கள் மற்றும் விளங்குளத்தூர் ஆதரவற்றோர் மையத்தில் உள்ளவர்கள் ஆகியோருக்கு கறி பிரியாணி உணவுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் நகர் கழக செயலாளர் ஏ.ஷாஜஹான், முன்னாள் துணை சேர்மன் பாசில் அமீன், தூவல் ஹரிமுத்துராமலிங்கம், முன்னால் மாவட்ட துணை செயலாளர் ஆர்.செல்லமணி, ‘முகம்மது இக்பால், மூர்த்தி, தூவல் மதியழகன், ஷாகுல் ஹமீது, விளங்குளத்தூர் மாயாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!