மதுரை சிம்மக்கல் பகுதியில் இயங்கி வரும் தனியார் விளையாட்டு உபகரணங்கள் விற்பனை கடையில் நேற்று புகை வந்துள்ளது கண்ட அந்த பகுதி மக்கள். தீயணைப்பு துறையினருக்கும் மற்றும் கடை உரிமையாளருக்கும் தகவல் தெரிவித்தனர் இதனைத் தொடர்ந்து.., மதுரை டவுன் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்த மதுரை டவுன் தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையிலான குழுவினர் விளையாட்டு பொருட்கள் விற்பனை நிலையத்தில் எரிந்துகொண்டிருந்த தீயை அணைத்தனர் முதற்கட்ட விசாரணை மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது உரிய நேரத்தில் அணைத்ததால் அருகிலுள்ள கடைகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது இச்சம்பவம் குறித்து திலகர் திடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.