விருதுநகர் மாவட்ட எல்லைப் பகுதியான செங்குளம் பகுதியில் சிவகாசியை சேர்ந்த சண்முகநாதன் என்பவர்க்கு சொந்தமான ராஜேஸ்வரி என்ற பட்டாசு ஆலை இயங்கி வருகிறதுஇன்று காலை வழக்கமான பணிகள் நடைபெற்று கொண்டிருந்தது இந்நிலையில் சீனி வெடி தயாரிக்கும் அறையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது இந்த வெடிவிபத்தில் ஆலையில் பணிபுரிந்த ஐந்து நபர்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர்.. மேலும் 3 பேர் படுகாயத்துடன் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். மேலும் தீ விபத்தில் உயிரிழந்த உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த வெடி விபத்து குறித்து டி.கல்லுப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.