முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு கல்லூரியில் உணவு திருவிழா..

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று (16/10/2018) காலை 11.30 மணியளவில் சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு உணவுத் திருவிழா கொண்டாடப்பட்டது.  இவ்விழாவை கல்லூரியின் முதல்வர் டாக்டர் A.R.நாதிராபானு கமால்  மற்றும் டாக்டர். வி. ஜெனட் ஒய் செல்வியா, வணிகவியல் மற்றும் கணினிபயன்பாட்டியியல் துறைத்தலைவர், அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இராமநாதபுரம் ஆகியோர் உணவு திருவிழாவை தொடங்கிவைத்தார்கள்.

அதனை தொடர்ந்து சிறப்புரையாற்றிய முதல்வர் மற்றும் சிறப்பு விருந்தினர் உரையாற்றுகையில்,  “தனி மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினையும் அழித்திடுவோம்” என்பது பாரதியின் வார்த்தைகள்.  ஆனால் அவ்வார்த்தையை பொய்ப்பிக்கும் வகையில் இன்றும் பல தரப்பட்ட மக்கள் ஒரு வேளை உணவுக்கு கஷ்டப்படும் நிலையில்தான் உள்ளனர். அந்த நிலையை மாற்றி அனைவருக்கும் போதுமான உணவு கிடைக்க வழியுறுத்தி அக் 16 தேதி உலக உணவு தினம் கடை பிடிக்கப்படுகிறது. “இடம் பெயர்வோரின் எதிர்காலத்தை மாற்றுங்கள்” என்பது இந்தாண்டு மையக்கருத்து, அதை மெய்படுத்தும் விதம் தேவையுடையோர் அனைவருக்கும் உணவு தேவையை பூர்த்தி செய்வதில் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கம் என்ற கருத்தை வலியுறுத்தி பேசினார்கள்.

இந்நிகழ்வில் பல்வேறு துறை மாணவிகள் மற்றும் பேராசிரியர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வின் ஓரு பகுதியாக  மாணவிகள் ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை குறைந்த விலையில் விற்பனைச்செய்து உணவு திருவிழாவை சிறப்பாக கொண்டாடினர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!