உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியப்பகுதியில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளுக்கான பூமி பூஜை அடிக்கல் நாட்டுவிழா மற்றும் திறப்பு விழா…

உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியப்பகுதியில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளுக்கான பூமி பூஜை அடிக்கல் நாட்டுவிழா மற்றும் திறப்பு விழா நடைபெற்றது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ஊராட்சி ஒன்றியத்தின் சார்பாக 22 கிராமங்களில் ரூ4 கோடியே 75 லட்சத்திற்கான சாலை வசதி அடிக்கல் நாட்டு விழா புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை விழா மற்றும் உசிலம்பட்டி அருகே போத்தம்பட்டி கிராமத்தில் அமைக்கப்பட்ட அம்மா பூங்கா திறப்பு விழா நடைபெற்றது.

உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி கலந்து கொண்டு திட்டங்களை துவக்கி வைத்தார்.விழாவில் அவர் பேசும் போது அம்மாவின் வழியில் சிறப்பான ஆட்சி நடைபெறுவதாகவும் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் செயல்படுதத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.உடன் அதிமுக நிர்வாகிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்:- மோகன், உசிலம்பட்டி

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!