தமிழக மீனவர்களுக்கு உதவ மத்திய அரசு தயார் : மத்திய அமைச்சர் உறுதி

கடல் உணவு பதப்படுத்தும் தொழிலில் விருப்பம் உள்ளோர் இணையத்தில் தொடர்பு கொண்டால் மத்திய அரசு உதவி செய்ய தயார் என மத்திய உணவு பதப்படுத்துதல் துறை இணை அமைச்சர் ராமேஸ்வர் டெலி கூறினார்.

மத்திய உணவு பதப்படுத்துதல் துறை இணை அமைச்சர் ராமேஸ்வர் டெலி இன்று மாலை இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்தார். சுவாமி தரிசனத்திற்கு பின் அவர் கூறுகையில்: தஞ்சையில் இன்று நடை அரசு விழாவில் கலந்துகொள்ள வந்தேன். அதன் பின் சுவாமி தரிசனம் செய்ய இங்கு வந்தேன். மத்திய அரசு அனைத்து தரப்பு மக்களுக்கும் உதவி செய்து வருகிறது. இந்நிலையில் தமிழக மீனவர்கள் பிடித்து வரும் மீன்களுக்கு சிண்டிகேட் இல்லாமல் கடல் மீன்களை கொள்முதல் செய்ய, மீனவர்கள் கடல் உணவு பதப்படுத்தும் தொழிலில் விருப்பம் இருந்தால், இணையம் மூலம் தொடர்பு கொண்டால் அவர்களுக்கு மத்திய அரசு உதவி செய்ய தயாராக இருப்பதாக, தெரிவித்தார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!